உக்கிர தாக்குதலுக்குள் உக்ரைன்- பைடன் விடுத்துள்ள அறிவிப்பு!
உக்ரைனுக்கு 600 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனடிப்படையில், ஒட்டுமொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டொலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பாதுகாப்பு, கல்விக்கு உதவ 350 மில்லியன் டொலர் வழங்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.