கதி கலங்கிய ரஷ்யா: டசின் கணக்கான போர் விமானங்களை அழித்தொழித்த உக்ரைன்
உக்ரைன் ரஷ்யா மீது அதன் மிகப்பெரிய ட்ரோன் அடிப்படையிலான தாக்குதலை நடத்தியுள்ளது.
குறித்த தாக்கதலானது, கிழக்கு சைபீரியாவில் அதன் எல்லையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள விமானப்படை தளம் மீது நடத்தப்பட்டுள்ளது.
பாரிய தாக்குதல்
அதன்படி, தாக்குதலை உறுதிப்படுத்திய இர்குட்ஸ்க் பிராந்தியத்தின் ரஷ்ய ஆளுநர், உக்ரைனிய ரிமோட்- பைலட் விமானம் ஸ்ரீட்னி கிராமத்தில் உள்ள ஒரு இராணுவப் பிரிவைத் தாக்கியதாகவும் சைபீரியாவில் இதுபோன்ற முதல் தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) நடத்திய பாரிய அளவிலான இந் தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட" ரஷ்ய விமானங்களைத் தாக்கியதாக உக்ரைனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, உக்ரைனின் பாதுகாப்பு சேவை, ஞாயிற்றுக்கிழமை ஓலென்யா மற்றும் பெலாயாவில் உள்ள விமான தளங்கள் உட்பட நான்கு ரஷ்ய இராணுவ விமான தளங்களை ஒரே நேரத்தில் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிதைக்கப்பட்ட விமானங்கள்
இந்த நிலையில், தாக்குதலில் அழிக்கப்பட்ட விமானங்களில் Tu-95 மற்றும் Tu-22M3 குண்டுவீச்சு விமானங்களும், ஒரு A-50 ரக விமானமும் அடங்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
தாக்குதல்கள் உறுதிசெய்யப்பட்டால், போரின் மிகவும் சேதப்படுத்தும் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலாக இந்த தாக்குதல் இருக்கும் என்றும் ரஷ்யாவுக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவும் ஏற்படும் என சர்வதேச வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
