இலங்கை மக்கள் தொடர்பில் முக்கிய திட்டத்தை அறிவித்துள்ள ஐ.நா!
இலங்கை, சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் தற்போதைய நெருக்கடியின் காரணமாக அவதானத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர் தெரிவித்துள்ளார்.
ஆகவே நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில், நன்கொடைத் திட்டம் ஒன்றை, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
உணவு மருந்து பற்றாக்குறைக்கான நிவர்த்தி திட்டம்
இது தொடர்பில் ஹனா சிங்கர் ஹம்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றும் இட்டுள்ளார்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மருத்துவப் பொருட்களில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கைக்கு, அதன் நண்பர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஹனா சிங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் நன்கொடை வழங்க விரும்புவோர், www.undp.org/srilanka/donate என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து, நன்கொடையை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sri Lanka's gains in healthcare, education and poverty alleviation are being threatened by the current crisis.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) September 19, 2022
#SriLanka ?? needs her friends to show solidarity to address shortages in #food and #medical supplies.
Donate: https://t.co/6FeO9hI64X pic.twitter.com/4JcqivEZlC
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)