தமிழர் படுகொலையில் ஐ.நா ஆணையாளரின் அடுத்த நகர்வு: அச்சத்துடன் உற்று நோக்கும் அரசு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் (Volker Türk) யாழ் (Jaffna) வருகைதான் தற்போது தமிழர் தரப்பில் பாரிய பேசு பொருளாக மாறியுள்ளது.
காரணம் அவரின் யாழ் வருகை என்பது தமிழ் மக்களிடையே புதிய ஒரு நம்பிக்கையையும் மற்றும் அவர்களுக்கான உரிமை தொடர்பில் பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதில் முக்கிய விடயமாக செம்மணி புதைகுழி விவகாரம் பெரிதும் பேசுபொருளாக காணப்படுகின்ற நிலையில், இவ்விவகாரம் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இலங்கையில் இனப்படுகொலை என்ற விடயம் நடைபெறவில்லை என காலம் காலமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அண்மையில் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மற்றும் சிதிலங்கள் அரசுக்கு பாரிய நெருக்கடியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், ஆணையாளர் வோல்கர் டர்க்கின் வருகை என்பது முக்கிய விடயமாக உற்றுநோக்கப்பட்டுள்ளது.
இவரின் இந்த வருகை இவ்வளவு நாள் முடக்கப்பட்ட தமிழ் மக்கள் உரிமை குறித்த விவகாரத்தில் ஏதேனும் திருப்பு முனையை ஏற்படுத்தலாம் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் குறித்த கோரிக்கைள் முழுவதுமாக அவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எடுக்க போகும் நடவடிக்கை, இலங்கை அரசுக்கு ஏற்படும் நெருக்கடி, தமிழ் அரசியல் தலைமைகளின் அடுத்த கட்ட நடவடிக்கை, செம்மணி புதைகுழி விவகாரம், தமிழ் மக்களுக்கான உரிமை தொடர்பில் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் நகர்வு மற்றும் பலதரப்பட்ட விடயம் தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
