காலி கோட்டை சுவரிலிருந்து வீழ்ந்து பல்கலை மாணவன் உயிரிழப்பு
காலி (Galle) கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்து ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (General Sir John Kotelawala Defence University) மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வக்வெல்ல, ஹபுகல பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 21 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் பயிலும் தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்றுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
காலி கோட்டையின் பழைய கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கோட்டை சுவரில் நடந்து சென்ற போது தவறி விழுந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால் நண்பர்கள் யாரும் அவர் விழுவதைக் காணவில்லை என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த இளைஞன், காவல்துறை அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
