உலகின் முடிவில் செல்பி எடுக்க முயன்ற மருத்துவபீட மாணவிக்கு நேர்ந்த விபரீதம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பயிலும் 23 வயதான மாணவி ஒருவர்,நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி உலகின் முடிவில் உள்ள பிரதான சரிவில் செல்ஃபி எடுக்கச் சென்றபோது, ஒரு செங்குத்தான பாறையிலிருந்து (19) சுமார் 50 அடி கீழே விழுந்து ஒரு மர கிளையில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் பல மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு மீட்கப்பட்டார் என்று ஹோட்டன் சமவெளி தேசியப் பூங்கா மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்.
கொழும்புபல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று(19) அன்று ஹோட்டன் தேசிய வனப் பூங்காவின் பிரதான பாறையைப் பார்வையிட வந்திருந்தது.
மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த மாணவி
காலை சுமார் 9:00 மணியளவில் அவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, கீழே விழுந்து ஒரு மர கிளையில் தொங்கிக்கொண்டிருந்தார். ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி ஒருவர், ஆபத்தைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி, தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து பல்கலைக்கழக மாணவியை மீட்டு, சரிவில் இருந்த ஒரு பாறையின் மீது அமர வைத்து, அவரைக் காப்பாற்ற பட்டிப்பொல காவல்துறைஅதிகாரிகள், இராணுவம் மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியைக் கோரினார்.

பெரும் முயற்சிக்கு பின்னர் மீட்பு
அதன்படி, நுவரெலியாவில் உள்ள இலங்கை 3வது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த பல கொமாண்டோக்கள், அப்படைப்பிரிவின் வீரர்கள், நுவரெலியா காவல்துறை சிறப்பு அதிரடிப் படையின் அதிகாரிகள், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல காவல்துறை பொறுப்பதிகாரி ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹோட்டன் கீழ் சரிவில் இருந்த பாறையின் மீது இருந்த பல்கலைக்கழக மாணவியை பெரும் முயற்சிக்குப் பிறகு மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்த்தனர் என ஹோட்டன் தேசிய வனப் பூங்காவின் மேலாளர் மஞ்சுல மொனரதென்ன தெரிவித்தார்.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |