உற்றுநோக்கலாக மாறிய சிறிலங்கா விவகாரம் - சர்வதேச விசாரணையே தீர்க்கமான முடிவு - ஜெனிவாவில் வலியுறுத்து

Human Rights Council United Nations Sri Lanka India OHCHR
By Kalaimathy Sep 16, 2022 12:09 PM GMT
Report

சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, மனித உரிமைகள் பேரவை அமர்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படும் நிலையில், இந்தியா கருத்துத் தெரிவித்திருந்தாலும் சிறிலங்கா தொடர்பான விடயத்தில் மௌனம் காத்துள்ளது.

சிறிலங்காவிற்கு எதிராக பிரித்தானியா தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில், பிரதான நாடுகளுடனான கலந்துரையாடல் ஒன்று ஜெனிவாவில் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே அண்டை நாடான இந்தியா, சிறிலங்கா தொடர்பில் எதுவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்தமை பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நிராகரித்த சிறிலங்கா

உற்றுநோக்கலாக மாறிய சிறிலங்கா விவகாரம் - சர்வதேச விசாரணையே தீர்க்கமான முடிவு - ஜெனிவாவில் வலியுறுத்து | United Nation Human Rights United Kingdom Geneva

பிரித்தானியா தலைமையில் இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரேரணையை சிறிலங்கா முற்றாக நிராகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில், மனித உரிமைகள் பேரவையில்,  சீனா, பாகிஸ்தான், ஈரான், பிலிப்பைன்ஸ், ரஷ்யாமற்றும் வியட்னாம் போன்ற நாடுகள் சிறிலங்காவிற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தன.

அத்துடன் இது ஒரு நாடு தொடர்பான விடயம், இதில் வேறு நாடுகள் தலையிடுவது பொருத்தமற்றது எனவும் தெரிவித்திருந்தன.

எனினும், நோர்வே, சுவிஸ் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராகதீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தீர்க்கமாகத் தெரிவித்திருந்தன.

மௌனம் காத்த இந்தியா

உற்றுநோக்கலாக மாறிய சிறிலங்கா விவகாரம் - சர்வதேச விசாரணையே தீர்க்கமான முடிவு - ஜெனிவாவில் வலியுறுத்து | United Nation Human Rights United Kingdom Geneva

இதேவேளை குறித்த அமர்வில் இந்தியா கருத்துத் தெரிவித்திருந்தாலும் சிறிலங்கா தொடர்பான விடயத்தில் மௌனம் காத்திருந்தது.

இதன் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 

இறுதி யுத்தம் முடிவடைந்து 13 ஆண்டுகளாக  சிறிலங்காவில் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் தமிழருக்கான தீர்வு வழங்குவதாக தொடர்ச்சியாக வாக்குறுதிகளை வழங்கி வந்தன ஆனாலும் இது வரை ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் கொடுத்த வாக்குறுயை நிறைவேற்றவில்லை.

ஆகவே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இனியும் சிறிலங்காவிற்கு வாய்ப்புக்கள் வழங்க முடியாது ஆகவே சர்வதேச விசாரணையே வேண்டும் எனவும் தீர்க்கமாக தெரிவித்துள்ளார்.

பலரது அதிருப்திக்குள்ளான பவானி பொன்சேகாவின் கருத்து

உற்றுநோக்கலாக மாறிய சிறிலங்கா விவகாரம் - சர்வதேச விசாரணையே தீர்க்கமான முடிவு - ஜெனிவாவில் வலியுறுத்து | United Nation Human Rights United Kingdom Geneva

இதேவேளை, இலங்கை மனித உரிமை வழக்கறிஞரும், ஆர்வலருமான பவானி பொன்சேகா கருத்துத் தெரிவிக்கயைில், 

இலங்கையில் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற, தமிழருக்கான உரிமை கோரும் போராட்டமும், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையும், அண்மையில் தென்னிலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த கிளர்ச்சியும் ஒன்று என்பதாகத் தெரிவித்திருந்தார்.

அவரது அவ்வாறான கருத்து மனித உரிமைகள் பேரவையில் இருந்த பலரதும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

அந்த அமர்வின் முதலாம் நாள் நிகழ்ச்சி நிரலில் சிறிலங்கா நிலவரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை சர்வதேசத்தில் ஒரு உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025