தொழிற்சங்க நடவடிக்கை குறித்து பிரபாத் ஏகநாயக்க வெளியிட்ட கருத்து
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளை பயங்கரவாத வடிவில் மேற்கொள்ளக் கூடாது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) கலைப்பீட பீடாதிபதி கலாநிதி பிரபாத் ஏகநாயக்க (Prabhat Ekanayake) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் ”கல்வி சாரா ஊழியர்கள் தமது தொழில் உரிமைகளை வென்றெடுப்பதற்காக செயற்படுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஆனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாத கல்வி ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தால் அதனை அங்கீகரிக்க முடியாது.
நிகழ்நிலையில் கற்பித்தல்
பல்கலைக்கழகத்தின் இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், விரிவுரையாளர்கள் தங்களின் தனிப்பட்ட பணத்தைச் செலவழித்து, நிகழ்நிலையில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டிக்கப்போவதாக அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.

கல்விசாரா ஊழியர்கள் மற்றும் நிர்வாக மட்ட அதிகாரிகளின் தொழில்சார் நடவடிக்கையினால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் முழு பல்கலைக்கழக அமைப்பிலும் உடைந்துள்ளது.
இதேவேளை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விரிவுரைகளை நடாத்தும் ஒரேயொரு நிலையம் கலைப்பீடத்தில் உள்ளதனால் தற்போது அதனைத் திறக்க முடியாது” என பிரபாத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்......! |