அரசாங்கத்திற்கு எதிராக மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
பல்கலைக்கழக மாணவர்கள்
அரசாங்கத்திற்கு எதிராக மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியானது சென்றுகொண்டிருக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்திற்கு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றமையை முன்னிட்டும், மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டு இரு மாதங்கள் நிறைவடைந்தும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்றைய தினம் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.