நாட்டில் மற்றுமொரு வேலை நிறுத்தம்!
அரச சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தை தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
17பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்கிறது.
பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோரி இலங்கையின் சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கும் நிலையில், நேற்றுமுன்தினம் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் தாதியர், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துவ பொருட்கள் விநியோக சேவை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.