பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு
சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாமல் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
அதன் பின்னர் குறித்த இளைஞர் அவர் 28 ஆம் திகதி கம்பளை (Gampola), இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறத்தில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
