காணாமல் ஆக்கப்பட்ட கணவன்! அப்பாவைத்தேடும் மகள்: முன்னாள் போராளியின் குடும்பத்தின் பரிதாப நிலை (காணொளி)
உறவுப்பாலம்
இலங்கையின் தற்போதைய நிலையில் சாதாரண நிலையை உடைய மக்களே அன்றாட வாழ்வில் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசாங்கம், அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல. ஊடகங்களுக்கும், ஒட்டு மொத்த சமூகத்திற்குமே உண்டு.
இப்படி வறுமையில் வாழும் குடும்பங்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் குடும்பத்தின் வடுக்களையும் வலிகளையும் வெளிக்கொணர்கிறது ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' நிகழ்ச்சி