மக்களை ஒடுக்குவதற்கான நேரம் அல்ல..! ரணிலை சந்தித்த அமெரிக்க தூதுவர்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இது தொடர்பில் , ஒரே இரவில் ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு கடமையும் உள்ளது
மேலும், சிறந்த எதிர்காலத்திற்கான இலங்கையர்களின் அழைப்புகளுக்கு பதிலளிக்க, அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு ஒரு வாய்ப்பும் கடமையும் உள்ளது.
குடிமக்களை ஒடுக்குவதற்கான நேரம் அல்ல, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் அரசாங்கம் எடுக்கக்கூடிய உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டுமென அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
(2/2) This is not the time to crack down on citizens, but instead to look ahead at the immediate and tangible steps the Government can take to regain the trust of the people, restore stability, and rebuild the economy.
— Ambassador Julie Chung (@USAmbSL) July 22, 2022


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 16 மணி நேரம் முன்
