புடினை சந்தித்த அமெரிக்காவின் முக்கிய புள்ளி
அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சந்திப்பில் ரஷ்யா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியமான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது அமைதியை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது என தெரிவித்துள்ளார். அமைதியை உருவாக்கும் பணியில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக அழுத்தம்
எனினும், போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ரஷ்யா மீது அதிக அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ரஷ்யா கைப்பற்றிய உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவே வைத்திருப்பதற்கு அனுமதிக்கும் வகையில் அமெரிக்காவின் சமாதான பேச்சுவார்த்தைகள் நகர்கின்றன.
ஜெலன்ஸ்கி, இதனை எதிர்த்த போதும் முழுமையான சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டால் இது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
