பலாலியில் அதிரடி காட்டும் அமெரிக்க விமானங்கள்: ஊடுருவும் சர்வதேச படைகள்
இலங்கை பாரிய பேரழிவிற்கு முகம் கொடுத்து தற்போது அதிலிருந்து மீள கட்டியெழும்ப பலதரப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக சர்வதேசத்தில் இருந்து பெரும்பாலான உதவிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாகத்தான், அமெரிக்காவின் இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.
இதனுடன் பலாலியில் இதுவரை அதிகம் தரையிறங்காத C130 ரக பெரிய சூப்பர் ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் தரையிறங்கி இருந்தன.
இந்தநிலையில், பேரிடர் காலத்தில் விமானமானது எங்கும் தரையிறங்கலாம் என்ற அடிப்படையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டாலும் கனரக விமானங்கள் இறங்க முடியாத பலாலி விமான நிலையத்தில் இது எப்படி சாத்தியம் என்ற அடிப்படையிலும் கேள்விகள் எழும்பியுள்ளது.
இந்த விமான தரையிறக்கத்தில் இந்தியாவிற்கும் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையில் சர்வதேச ரீதியில் சில அரசியல் நகர்வுகள் தங்கியுள்ளது எனவும் கருதப்படுகின்றது.
இவ்வாறு, இந்த நடவடிக்கையில் தங்கியுள்ள அரசியல், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் சர்வதேச அரசியல் இலங்கை மீது செலுத்தும் தாக்கம் என்பவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றை செயதிகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |