இஸ்ரேலை விட்டு உடனே வெளியேறுங்கள்...! அமெரிக்கர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு
இஸ்ரேலில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி விவகாரத்தில் நடைபெற்ற மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறித்த விடயத்தை இந்தச் சமரச முயற்சியை முன்னெடுத்து வரும் ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசைதி தெரிவித்திருந்தார்.
விமான சேவை
இதன் காரணமாக, இருதரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தூதரகப் பணியாளர்களுக்கும் மற்றும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கும் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

இதில், இஸ்ரேலிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் தாக்குதல்களைத் தொடுக்கலாம் என்ற பதற்றமான சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டியே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இனி வரும் நாள்களில் இஸ்ரேலுக்கான விமான சேவையும் முடக்கப்படலாம் என்றும் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |