காலவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை
மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து காலாவதியான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த விற்பனை நிலையத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்க பெற்ற பொது மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையை அடுத்து மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலாவதியான பொருட்கள்
விற்பனை நிலையத்தின் காலாவதியான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்ததன் அடிப்படையிலும் அழுகிய பழங்கள் மரக்கறிகளை விற்பனைக்காக வைத்திருந்ததன் அடிப்படையிலும் களஞ்சிய சாலை சுகாதாரமான முறையின் பேணப்படமையின் அடிப்படையிலும் விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்படவுள்ளதுடன் விற்பனை நிலையத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏனைய சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை களஞ்சிய சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |