அமெரிக்காவின் வசமாகும் திருகோணமலை துறைமுகம்
திருகோணமலை (Trincomalee) துறைமுகம் அமெரிக்கா (United States) வசமாகுவுதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிழவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்கா கையகப்படுத்தும் என்ற அடிப்படையிலதான் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்பாட்டை இந்தியா (India) கொண்டு வந்தது.
இதையடுத்து வளர்ச்சியடைந்த சீனா (China), திருகோணமலையை துறைமுகத்தை தாண்டி அம்பாந்தோட்டையில் (Hambantota) தன் கவனத்தை செலுத்தியது.
இந்தநிலையில், சீனா குறித்த துறைமுகத்தை கைவிட்டமையினால் இதில் பிரச்சினை அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு ஆரம்பமாகியுள்ளது.
இந்தியாவினுடைய ஆரம்ப நடவடிக்கைகளை நாட்டினுள் இலங்கை (Sri Lanka) அரசு அனுமதித்தாலும் அதன் ஆதிக்கத்தையும் மற்றும் அதனை முழுமைபெறவும் எப்போதும் இலங்கை அரசு அனுமதிக்காது.
இதனால், தற்பொழுது அமெரிக்காவின் ஆதிக்கம் அங்கு முக்கியத்துவம் பெருவதுடன் இந்தியாவை ஒரு பொழுதும் அமெரிக்கா அங்கு அனுமதிக்காது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் அரசியலில் சர்வதேசத்தின் தாக்கம், இலங்கை மற்றும் சர்வதேசத்திற்கும் இடையில் உள்ள அரசியல் தொடர்பு, இலங்கையில் நடைபெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பலதரப்பட்ட அரசியல்சார் விடங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
