போருக்கு மத்தியில் ஈரானுடன் பேச்சு :ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
'அர்த்தமுள்ள' அணுசக்திப் பேச்சுவார்த்தைகளுக்கு தெஹ்ரான் தயாராகும் வரை, ஈரானுடன் பேசுவதில் வோஷிங்டனுக்கு 'ஆர்வமில்லை' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(21) தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனுடன் நடந்த சந்திப்பின்போது பேசிய ட்ரம்ப், அமெரிக்காவைச் சந்திக்க ஈரான் 'தீவிரமாக' விரும்புவதாகவும், ஆனால் வோஷிங்டன் விரும்பும் வகையான உரையாடலை அது இன்னும் முன்வைக்கவில்லை என்றும் கூறினார்.
அவர்கள் சந்திக்க மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள்
"அவர்கள் சந்திக்க மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் அர்த்தமுள்ள வகையில் சந்திக்கத் தயாராகும் வரை, எங்களுக்கு அதில் கூட எந்த ஆர்வமும் இல்லை," என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

மிகக் கடுமையாக அந்தப் பகுதியைத் தாக்குவோம்
'ஈரான் பிக்காக்ஸ் மலைக்கு அணுசக்தி சென்ட்ரிஃபியூஜ்களை நகர்த்தியுள்ளதா?' என்று கேட்டதற்கு, ட்ரம்ப், "ஆம், அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அது குறித்த எந்த பதிவும் எங்களிடம் இல்லை," என்று பதிலளித்தார்.

பொதுவாக, நான் அப்படிச் சொல்ல மாட்டேன். அவர்களால் அதைப் பற்றி ஏதாவது செய்ய முடியும் என்று நான் நினைத்தால், நான் ஒருபோதும் அப்படிச் சொல்ல மாட்டேன். ஆனால் நாங்கள் மிக விரைவில், மிகக் கடுமையாக அந்தப் பகுதியைத் தாக்குவோம்," என்று அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்