முடிவுக்கு வரும் மத்திய கிழக்கு யுத்தம்...! வெளியான அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் இறுதியான ஒப்புக்கொள்ளப்பட்ட வரைவு உரை எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைப் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே போர் நிலவிய காலகட்டம் முழுவதும் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான், தற்போது அடுத்தகட்ட நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக இரு தரப்புடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அதிகாரிகள்
அத்தோடு அமைதி என்பது முன்னெப்போதையும் விட இப்போது மிக அருகில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட சர்வதேச அதிகாரிகள் வெளியிட்டு வரும் அறிவிப்புகளைப் பாகிஸ்தான் பிரதமரின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக ஆவணங்களை இறுதி செய்வதற்கு உட்பட்டு அமெரிக்கா ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சிறந்த சமரசத்தை எட்டியுள்ளது என வியாழக்கிழமை பிற்பகல் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதேவேளை பாகிஸ்தான் பிரதமரின் பதிவிற்கு முன்னதாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடனான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட மிக நெருக்கமாக உள்ளது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |