ஹோர்முஸ் முற்றுகைக்கு மத்தியில் அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி விலகினார்
ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு, ஈரானுடன் டொனால்ட் ட்ரம்ப் நடத்தி வரும் தொடர் மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்கக் கடற்படைச் செயலாளர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக நீர்வழிப் பாதை தொடர்பாக ஈரானுடன் ட்ரம்ப் நடத்தி வரும் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், ஜான் சி. ஃபெலன் புதன்கிழமை பிற்பகல் தனது உயர்மட்ட இராணுவப் பதவியிலிருந்து விலகினார்.
பதவி விலகினாரா விலக்கப்பட்டாரா…!
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி விலக்கப்பட்டுள்ளதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளரான சோன் பார்னெல் தெரிவித்துள்ளார். கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவோ தற்காலிக செயலாளராகப் பணியாற்றுவார் என்று அவர் கூறியுள்ளார்.

ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேல் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகைக்கு மத்தியில் அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
விலகலுக்கான காரணத்தை கடற்படை தெரிவிக்கவில்லை.
அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் ஃபெலனின் விலகலுக்கான காரணத்தை கடற்படை தெரிவிக்கவில்லை.

மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகளான ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோர் அண்மையில் பதவி விலக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |