ரஸ்யாவுக்கு பேரிடி - சத்தமே இல்லாமல் அமெரிக்கா செய்த சம்பவம்..!
ரஷ்ய இரகசியங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷ்ய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
அதன்படி ரஷ்யாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான அப்பிள் கையடக்கத்தொலைபேசிகளை உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மாஸ்கோவை சேர்ந்த கேஸ்பர்ஸ்கை ஆய்வுக்கூடம் தெரிவித்துள்ளது.
உளவு நடவடிக்கை
மேலும், நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைபேசிகளில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் ரஷ்யாவை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகளின் சாதனங்களும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அப்பிள் கையடக்கத்தொலைபேசி சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்,' என பாதுகாப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக அப்பிள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பு இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிகின்றன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் ரஷ்ய பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
