உலகக் கோப்பை கால்பந்து ரசிகர்களுக்கு ட்ரம்பின் மகிழ்ச்சியான அறிவிப்பு
சிறப்பு விரைவு விசா திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்களுக்காகஇந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் அடுத்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை உலகக் கோப்பை கால்பந்து போட்டி இடம்பெறவுள்ளது.
பற்றுசீட்டு முன்பதிவு
இதற்காக அமெரிக்காவில் நடக்கும் போட்டியை காண தற்போதே இலட்சக்கணக்கானோர் பற்றுசீட்டுக்களை முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்பின் விசா கட்டுப்பாடுகள் கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்களை பாதிக்குமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.
இந்த பின்ணனியில், வெள்ளை மாளிகையில் பிபா எனப்படும் சர்வதேச கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜியான்னி இன்பான்டினோ உடன் கலந்துரையாடல் ஒன்றை டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.
ரசிகர்களுக்கு விசா
இதையடுத்து, பிபா பாஸ் என்ற புதிய திட்டத்தை அவர் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், பிபா மூலம் நேரடியாக பற்றுசீட்டுக்களை வாங்கிய ரசிகர்களுக்கு விசா நேர்காணலில் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 20 மணி நேரம் முன்