ட்ரம்ப் - புடின் பேச்சுவார்த்தை தோல்வி என்றால்... இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா
நாளையதினம் (14)அலாஸ்காவில் நடைபெறவுள்ள ட்ரம்ப் - புடின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இந்தியாவுக்கு மேலதிகமாக மீண்டும் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீ த வரி விதித்தது. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்தியா மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
ட்ரம்ப் - புடின் இடையே பேச்சுவார்த்தை
இதனிடையே, உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால், ரஷ்யா கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ட்ரம்ப் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க திறைசேரிஅமைச்சர் ஸ்கொட் பெசன்ட் கூறியதாவது: இந்தியா மீது வரி விதிக்கப்பட்டு உள்ளது. அலாஸ்காவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா
