இலங்கைத் தீவின் கரையோரத்தில் நங்கூரமிட்டுக் காத்திருக்கும் கப்பல்!
FUEL SHIP
PAYMENT DELAYED
By Kanna
ஐந்து நாட்களுக்கு முன் 22,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 22,000 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருளுடன் இலங்கை வந்த எரிபொருள் கப்பலிற்கு 42 மில்லியன் மிகுதி தொகை செலுத்த வேண்டி இருந்தது.
அந்த மிகுதி தொகையை இலங்கை செலுத்தாததன் காரணமாக கடந்த 5 நாட்களாக நாட்டின் கரையோரத்தில் நங்கூரமிட்டபடி காத்துள்ளது எரிபொருள் கப்பல்.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இன்னும் 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற முடியவில்லை என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர் ஓல்கா கூறினார்.
எவ்வாறு இருந்தாலும் எதிர்வரும் 18ம் திகதி எரிபொருளிற்கான 42 மில்லியனை செலுத்தவிருப்பதாக ஓல்கா தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது நாளாந்த எரிபொருள் தேவை 9,000 மெட்ரிக் தொன்னாக இருந்தாலும் 7,000 மெட்ரிக் தொன் மட்டுமே விநியோகிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மரண அறிவித்தல்