வவுனியாவில் இடம்பெறும் சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - செல்வம் எம். பி சீற்றம்

Sri Lanka Police Vavuniya Selvam Adaikalanathan
By Sumithiran Jul 24, 2023 11:02 PM GMT
Report

வவுனியாவில் இடம்பெறும் சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடும் தொனியில் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனந்தெரியாதவர்களின் தாக்குதலில் ஒருவர் மரணம்

வவுனியாவில் இடம்பெறும் சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - செல்வம் எம். பி சீற்றம் | Vavuniya Can No Longer Watch The Incidents

வவுனியாவில் என்ன நடக்கின்றது. தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக ஒருவர் மரணித்ததுடன் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களும் எரிகாயங்களுக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மார்ச் மாதம் 07ம் திகதி நான்கு பேர் படுகொலையா அல்லது தற்கொலையா என்று தெரியாத நிலையிலே இன்று வரை இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதா அல்லது அது தொடர்பாக என்ன நடந்துள்ளது என்று கூட தெரியாத சூழலிலே, மீண்டும் ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது கண்டிக்கத்தக்க விடயம்.

காவல்துறையின் மெத்தன போக்கு

வவுனியாவில் இடம்பெறும் சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது - செல்வம் எம். பி சீற்றம் | Vavuniya Can No Longer Watch The Incidents

வவுனியாவை பொறுத்தவரை நம்பிக்கையுடன் வந்து போக கூடிய மக்களும், நம்பிக்கையுடன் வாழக்கூடிய மக்களுக்கும் இந்தசம்பவம் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சம்பவங்களிற்கு காவல்துறையினர் தமிழர்கள் என்ற காரணத்தினால் பேசாமல் விடுகின்ற நிலையை கையாள்கிறார்களா? என்ற கேள்வி எழுகின்றது.இதே நிலைமை தென்னிலங்கையில் நடைபெற்றால் உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பார்கள்.

தமிழர்கள் எந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களாக தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. இந்த நேரத்தில் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் வெளிப்படையான ஒரு கருத்தை கேட்க விரும்புகிறேன். வவுனியாவில் உள்ள ரவுடி கும்பல் மற்றும் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சட்டத்தை மதிக்காதவர்கள் வாழ்கின்ற இந்த வவுனியாவில் அதனை அடக்குவதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

அமைதியான இடமாக இருந்த வவுனியா தற்போது மிக மோசமான வன்முறையை கொண்ட இடமாக மாறியுள்ளது. மக்கள் அச்சப்படுகின்றனர், பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்ல அச்சப்படுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்திலும் காவல்துறையினர் மெத்தன போக்கை காட்டக்கூடாது என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தோடு இனியும் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். 26ம் திகதி அதிபரை சந்திக்க உள்ளோம். அப்போது இவ்விடயத்தினை மிக முக்கிய பிரச்சினையாக விவாதிப்பேன்.

ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் தமிழர்களிற்கு எது நடந்தாலும் பரவாயில்லை என எண்ணுகின்ற காவல்துறையினர் அல்லது அரசாங்கம் இதைத்தான் செய்யப்போகின்றதா என நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நிலைமையை தொடர விடாமல் நீதியினை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் எடுக்க வேண்டும். அத்தோடு நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024