வெடுக்குநாறி மலை விவகாரம்! தமிழ் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

Sri Lanka Police Tamils Parliament of Sri Lanka Vavuniya
By Laksi Mar 13, 2024 03:50 PM GMT
Report

மகா சிவராத்திரி தினத்தன்று மத உரிமையை மறுதலித்து வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட அராஜகத்திற்கு நீதிகோரல் மற்றும் ஆலயத்தில் கைதான அடியவர்களை விடுவிக்க கோரி நாடாளுமன்றை புறக்கணிக்குமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

”மகா சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற காவல்துறையினரின் அட்டுழியங்களையும் தொடர் விளைவாக ஆலய பூசகர் தர்மகர்த்தாக்கள் உட்பட எண்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்

விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்!

விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்!

தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு

இந்த நிலையில், இலங்கையில் வட கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் வழிபாட்டிற்கான சைவ ஆலயங்கள் குறிப்பாக புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது.

அதேநேரம், அவை அரச இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பாக காவல்துறை தொல்லியல் வனவள திணைக்களங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளூர் தமிழ் மக்கள் சொல்லொனாத்துயரை அனுபவிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

வெடுக்குநாறி மலை விவகாரம்! தமிழ் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை | Vedukkunarimalai Members Of Parliament Tamils

எத்தனையோ கண்டன அறிக்கைகள் கவனயீர்ப்புக்கள் நடைபெற்ற போதும், அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று ஆகிவிட்டது

இந்நிலையில், அரசிற்கு பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும் சிங்கள பொதுசனங்களதும் சர்வதேச கவனத்தையும் ஈர்த்து இந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டு வரும் நிலையில் ஒத்துழையாமை போராட்ட வடிவங்களில் ஒன்றாகிய நாடாளுமன்றை உரிய தீர்வு கிடைக்கும் வரை புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ் பொது அமைப்புக்கள் மத நிறுவனங்கள் சிவில் சமூகம் சார்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பினராகிய நாம் கோரி நிற்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக திகழப்போகும் கொழும்பு துறைமுக நகரம்

தெற்காசியாவுக்கான நுழைவாயிலாக திகழப்போகும் கொழும்பு துறைமுக நகரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026