லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு

Anura Kumara Dissanayaka Journalists In Sri Lanka Harshana Nanayakkara
By Sathangani Feb 08, 2025 08:29 AM GMT
Report

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) கொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

போதுமான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் மூன்று சந்தேகநபர்களையும் வழக்கிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் (08) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சட்டமா அதிபருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்ற போது நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் (Harshana Nanayakkara) கலந்து கொண்டிருந்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி மீது தாக்குதல்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி மீது தாக்குதல்

நீதி அமைச்சர் தெரிவிப்பு 

இந்த சந்திப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு | Verdict On Lasantha Wickramatunga S Murder

ஒரு வழக்கு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கவோ அழுத்தம் கொடுக்கவோ முடியாது. எனினும் என்ன நடக்கின்றது என்பது குறித்து ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.

சட்டமா அதிபரை பதவி நீக்குவது எதுவும் பேசப்படவில்லை, சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவதானால் அதற்கு ஒரு நடைமுறை இருக்கின்றது.” என தெரிவித்தார்.

யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

யாழ் மக்களுக்கு காத்திருக்கும் நற்செய்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்

கேள்வியெழுப்பிய ஜனாதிபதி

இதேவேளை குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த 3 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சட்டமா அதிபர், இந்த 3 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய நபர்களும் சாட்சியங்களை வழங்கிய நபர்களும் எங்கே இருப்பதாக கண்டுபிடிக்க முடியவில்லை.

லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு | Verdict On Lasantha Wickramatunga S Murder

அத்துடன் அவர்கள் ஏற்கனவே முன்வைத்த குற்றச்சாட்டுக்களையும் சாட்சியங்களையும் மீளப்பெற்றுள்ளார்கள். எனவே சந்தேக நபர்களை விடுதலை செய்வதை விட வேறு வழியில்லை என பதிலளித்துள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் எந்தக் காலகட்டத்தில் இந்த சாட்சியங்களை மீளப்பெற்றுள்ளார்கள் என ஜனாதிபதி கேள்வியெழுப்பியதற்கு 2020 மற்றும் 2021 காலகட்டங்களில் இவ்வாறு நடைபெற்றது என பதிலளித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa)  காலகட்டத்தில் தான் இவ்வாறு நடைபெற்றுள்ளதாகவும் இது ஒரு அரசியல் பழிவாங்கலாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்

இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 




ReeCha
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024