பெண்ணிடம் இலஞ்சம் பெற்ற கிராமசேவை அதிகாரி கைது
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Laksi
ஹீரஸ்ஸகல கிராமசேவை அதிகாரி ஒருவர் பெண் ஒருவரிடம் 25,000 ரூபாவை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியை நேற்று (26) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஹீரஸ்ஸகல கிராம சேவை பிரிவில் வசிக்கும் பெண் ஒருவர் குறித்த பிரதேசத்தில் கடமையாற்றும் கிராமசேவை அதிகாரி தன்னிடம் 25,000 ரூபா இலஞ்சமாக கேட்பதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
கைது நடவடிக்கை
இதனையடுத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஹிரஸ்ஸகல பிரதேசத்திற்குச் சென்று கிராம உத்தியோகத்தர் அலுவலக வளாகத்தில் பணம் கொடுத்த போது அவரை கைது செய்துள்ளனர்.
முறைப்பாடு செய்த பெண்ணின் மகனின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் கிராம அதிகாரி இந்தப் பணத்தை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்![கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…](https://cdn.ibcstack.com/article/be32300b-7292-4007-95f8-41795e7a8c3f/24-6662705be1451-sm.webp)
கல்வி ஆயுதம் தான் தமிழினத்தை மீள் எழுச்சி கொள்ளச் செய்யும்…
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்