இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு எதிராக பிரித்தானிய பிரஜை ரிட் மனு..!
இலங்கையில் இருந்து வெளியேற்ற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி பிரித்தானிய பிரஜையான ஸ்கொட்லாந்து யுவதி கெலின் பிரேஷர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
காலிமுகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோ கம போராட்டத்தில் தான் செயற்பாட்டு ரீதியாக பங்களிப்பு வழங்கியதாக மனுதாரர் மனுவில் கூறியுள்ளார்.
இதேவேளை , குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தனக்கு வழங்கப்பட்டிருந்த விசா அனுமதியை தன்னிச்சையாக இரத்துச் செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த முடிவுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும், தனது விசாவை இரத்து செய்யும் முடிவை மாற்றி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கெலின் பிரேஷர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து
காலிமுகத்திடல் போராட்ட களத்தில் நடந்த விடயங்களை இவர் சமூக வலைத்தளங்களில் நேரலையில் பதிவேற்றியமை தொடர்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள விசா அனுமதியை இரத்துச் செய்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி, பிரித்தானிய பெண்ணின் விசா இரத்து - இலங்கையை விட்டு வெளியேறவும் உத்தரவு
