புடினுக்கு வாக்னர் குழு பதிலடி - விரைவில் ரஷ்யாவிற்கு புதிய அதிபர் - வலுக்கிறது நெருக்கடி
ரஷ்யாவுக்கு விரைவில் புதிய அதிபர் கிடைப்பார் என்று நாட்டு மக்களுக்கு புடின் உரையாற்றிய நிலையில் வாக்னர் ஆயுதக் குழு பதிலடி கொடுத்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடின், அரச தொலைக்காட்சி ஊடாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சில நிமிடங்களிலேயே வாக்னர் குழு தனது டெலிகிராம் பக்கத்தில் ஒரு பதிலடியைப் பதிவிட்டுள்ளது.
விரைவில் ரஷ்யாவுக்கு புதிய அதிபர்
imaje -reuters
அதில், ‘ரஷ்ய அதிபர் தவறான முடிவை எடுத்துள்ளார். விரைவில் ரஷ்யாவுக்கு புதிய அதிபர் கிடைப்பார்’ என்று பதிவிட்டுள்ளது.
தொடர்ந்து டெலிகிராமில் ஒரு ஓடியோவை வெளியிட்ட வாக்னர் குழு தலைவர் பிரிகோஸின், “தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் அதிபர் புடின். அது ஓர் ஆழமான தவறு.
தாய்நாட்டின் பாதுகாவலர்கள்
நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புடினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே உக்ரைன் போரால் பொருளாதார தடை உட்பட பல்வேறு நெருக்கடியில் சிக்கியுள்ள ரஷ்யாவுக்கு இது இன்னொரு அழுத்தமாக சேர்ந்து கொள்ள உலகமே இதனை உற்று நோக்கி வருகிறது.
