இலங்கையை சர்வதேச குற்றவியல் கூண்டில் நிறுத்து - அமெரிக்காவில் தீவிர முனைப்பு
இலங்கை மீதான சர்வதேச விசாரணை
இலங்கையில் தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை மையப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்தவேண்டும் என அமெரிக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கையின் முக்கிய குழுவில் அமெரிக்காவும் அங்கம் வகிக்கிறது.
இந்த நிலையில், 6 அமெரிக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து இக்கடிதத்தினை எழுதியுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம்
இந்த அமர்வின் போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை இணங்குவது குறித்து இலங்கை மதிப்பீடு செய்யப்படும்.
பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்றங்கள், அட்டூழியத்திற்கான பொறுப்புக்கூறலை அடைவதற்கான வலுவான தீர்மானத்தை முறையாக முன்வைக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு, ஐ.நா பாதுகாப்புச் சபையை வலியுறுத்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடகொரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளை மேற்கோள்காட்டி, விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் அமெரிக்க புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள், கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
சீனாவால் தப்பிக்குமா இலங்கை..! ஜெனிவா அமர்வால் ஒன்றுபட்ட தமிழர் தரப்பு