குற்ற இடங்களை காணொளி எடுப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Photoshoot Crime
By Sathangani Jan 21, 2026 08:30 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

குற்ற இடங்களுக்கு இடையூறு விளைவிப்பது அல்லது ஆதாரங்களை சிதைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது என குற்ற இடப் புலனாய்வுப் பயிற்சிப் பிரிவின் பொறுப்பதிகாரி சாமர விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் குற்றங்கள் நடக்கும் இடங்களில் ஆதாரங்களைப் பாதுகாப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்தைப் பேணுவது தொடர்பாக இலங்கை காவல்துறை பொதுமக்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது குறித்து சாமர விஜேரத்ன மேலும் தெரிவிக்கையில், “அங்கீகரிக்கப்படாத நபர்கள் புகைப்படம் எடுப்பதாலோ அல்லது காணொளி எடுப்பதாலோ மிக முக்கியமான தடயவியல் ஆதாரங்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது.

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

விகாரைகளில் கை வைக்க வேண்டாம் - ரணில் NPP அரசுக்கு எச்சரிக்கை

புலனாய்வுப் பணிகள்

தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள குற்ற இடப் புலனாய்வு அதிகாரி (SOCO) பிரிவுகள், நவீன தொழில்நுட்பங்களுடன் புலனாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

குற்ற இடங்களை காணொளி எடுப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை | Warning Jail Sentence For Videotaping Crime Scenes

பொதுமக்கள் தன்னிச்சையாக ஆதாரங்களைத் தொடுவதாலோ அல்லது இடத்தை அசுத்தப்படுத்துவதாலோ இவர்களின் விசாரணை பாதிக்கப்படுகின்றது.

அத்துடன் உயிரிழந்தவர்களின் அல்லது காயமடைந்தவர்களின் படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவது அவர்களின் தனிப்பட்ட கண்ணியத்தை மீறும் செயலாகும்.

இலங்கையில் மீண்டும் தங்க விலையில் மாற்றம் : ஒரே நாளில் 15,000 ரூபாய் அதிகரிப்பு

இலங்கையில் மீண்டும் தங்க விலையில் மாற்றம் : ஒரே நாளில் 15,000 ரூபாய் அதிகரிப்பு

 நீதி நிலைநாட்டப்பட வேண்டும்

இந்தநிலையில் குற்ற இடங்களுக்கு இடையூறு விளைவிப்பது அல்லது ஆதாரங்களை சிதைப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. குறிப்பாக கொலை போன்ற பாரிய குற்றங்களில் ஆதாரங்களை சிதைப்பவர்களுக்கு நீண்ட காலச் சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

குற்ற இடங்களை காணொளி எடுப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை | Warning Jail Sentence For Videotaping Crime Scenes

குற்ற இடங்கள் எவ்வளவு குழப்பமாகத் தெரிந்தாலும், புலனாய்வு அதிகாரிகள் வரும் வரை எதையும் மாற்ற வேண்டாம். காவல்துறை அதிகாரிகள் தமது கடமையை செய்ய முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், உண்மையான ஆதாரங்கள் சிதையாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்“ என குறிப்பிட்டுள்ளார்.

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது!

லண்டனுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர் உட்பட புலம்பெயர் தொழிலதிபர் கைது!


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025