குறுகிய கால எரிபொருள் நிவாரணம்: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் அதிகரித்தால் குறுகிய காலத்திற்கு எரிபொருளில் நிவாரணம் வழங்க நிதி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உலகத்துடன் தொடர்புடைய காரணங்களுக்காகவே எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பல நாடுகளில் அதிகரிப்பு
இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, இந்நேரத்தில் ரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படாவிட்டால், எரிபொருள் கூட்டுத்தாபனம் தவிர மற்ற தனியார் நிறுவனங்கள் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ வேண்டியிருக்கும் எனவும் அது எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |