விஜேதாச ராஜபக்சவின் மகன் குறித்த அறிக்கை: BASL இன் நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் கேள்வி
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஒரு குறிப்பிட்ட விசேட குழுவைப் பாதுகாப்பதற்காகச் செயல்படுகிறதா என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அல்லது அவரது மகன் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டால் தான் மிக்க மகிழ்ச்சியடைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே நேர்மையானவையா அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் அமைப்பு திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் உத்தேசித்துள்ளதை பிரதியமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலதிக விவரங்கள்
நீதித்துறை தொடர்பான மாற்றங்களுக்கு அரசியல் அமைப்பு திருத்தம் (Constitutional Amendment) அவசியமானது என்றும் மற்றும் ஏனைய மறுசீரமைப்புகளை அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பிலும் பிரதியமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்தஅவர், நாடாளுமன்ற சிறப்புரிமைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு மட்டுமே அசித நிரோஷன இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என நான் நம்பவில்லை எனவும் இது குறித்த மேலதிக விவரங்களை அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்தே கேட்டுப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |