இடிக்கப்படும் வீடுகள் - கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 8 அரச அடுக்குமாடி குடியிருப்புகள் பாரியளவில் பாழடைந்து காணப்படுகிறது.
குறித்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக இந்த வீட்டுத் தொகுதிகளை இடிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீட்டுத் தொகுதிகள்
வகந்த அடுக்குமாடித் திட்டம், பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்புத் திட்டம், சிறிதம்மா மாவத்தை வீடமைப்புத் திட்டம், கந்தேபுர அடுக்குமாடித் திட்டம், B36 மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டம், ஜி. எச். ஜே. கே. எம். மற்றும் என். மிஹிந்து மாவத்தை வீடமைப்புத் திட்டம் ஆகிய எட்டு வீட்டுத் தொகுதிகள் இவ்வாறு மோசமான நிலையில் காணப்படுகின்றன.
இந்த வீட்டுத் தொகுதிகளை இடிப்பதற்கு வீடமைப்பு அமைச்சிடம் முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
