ட்ரம்பின் வரி ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
ட்ரம்பின் வரி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டுள்ள அரசாங்கம் அவற்றை நிறைவேற்ற தவறுமாயின் அவை பாரிய சிக்கல்களை நாட்டில் ஏற்படுத்தும்.அதற்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் ஜனாதிபதியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “ட்ரம்பின் வரி குறைப்பில் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்ய அரசாங்கம் இணங்கியதாலே வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு நாடுகளுக்கிடையிலான் இராணுவ பரிமாற்றம் மற்றும் எக்ஷா,சோபா ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட வேண்டும்.கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி அநுர எக்ஷா,சோபா ஒப்பந்தங்களை கடுமையாக எதிர்த்தவர்.
பெரும் கஷ்டத்தில் மக்கள்
அதனால் அரசாங்கம் இந்த ஒப்பந்தகளில் கைசாத்திடுமாயின் அதை நாட்டு மக்களுக்கும் நாடாளுமன்றனத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும்.ஆகையால் இதில் அரசாங்கம் உண்மையாக செயற்பட வேண்டும்.
ஜனாதிபதி வெளியிட்ட பொருளாதார தரவுகளை எடுத்து நோக்கினால் நாடு செலிப்பாக இருப்பதாக தென்படுகிறது.ஆனால் நாட்டு மக்களிடம் கேட்டால்,பெரும் கஷ்டத்தில் வாழ்க்கை நடத்துவதாக தெரிவிக்கின்றனர்.
பொருளாதார தரவுகளில் நாட்டை முன்னெற்ற முடியாது.வீட்டின் பொருளாதாரம் உயரத்தப்பட வேண்டும்.அவர்களின் பையில் பணம் இல்லை என்றால், எவ்வாறு பொருளாதார அபிவிருத்தி என்று குறிப்பிட முடியும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
