பயணங்களின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை தெரியுமா...!
நமது வாழ்க்கையில் பயணம் என்பது முக்கியமான ஒன்று, அந்த பயணங்களில் நாம் உண்ணும் உணவுகளில் மிகுந்த கவனம் தேவை.
குறிப்பாக நமது பயணத்திற்கு ஏற்ற உணவா அது? உடல் நடத்தைக்கு ஏதும் பாதிக்குமா? என யோசித்து பயண நேரத்தில் சில உணவுகள் சாப்பிட வேண்டும்.
இல்லையெனில், அது நம் பயணத்தையே பாதிக்கும் உணவாக மாறிவிடும்.
மது
பயணத்தின் போதும், சுற்றலா செல்லும் போதும் பலர் சேர்ந்து மது அருந்துவார்கள்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட முடியாது, இரவு மது அருந்தினால் காலை எழ தாமதமாகும்.
சோர்வாக இருக்கும் இதனால் கால விரையம் ஏற்படலாம். இவ்வாறான பிரச்சனைகள் இருப்பதால் மதுவை தவிர்ப்பது நல்லது.
காஃபின் பானங்கள்
சோர்வையும் தூக்கத்தையும் தவிர்க்க பயணத்தின் போது கோப்பி, பால் தேநீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவோம்.
ஆனால் இவற்றில் உள்ள காஃபின் நம்மை அறியாமலேயே வேலை செய்யும்.
காஃபின் மட்டுமல்ல, சர்க்கரை அதிகம் கொண்ட பானங்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
படிப்படியாக உடலின் நீர்ச்சத்து அளவு குறைந்து சோர்வு ஏற்படலாம். ஆகவே சோர்வாக இருக்கும்போது முடிந்தளவு தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள்.
பொரித்த உணவுகள்
பயணத்தின் போது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வறுத்த அல்லது பொரித்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். அதிக அளவு எண்ணெய் உடல் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், மந்தநிலை ஏற்பட்டு பயணத்தின் மகிழ்ச்சியை பாதிக்கலாம்.
குளிர்பானங்கள்
பயணத்தின் போது தாகம் எடுத்தால், முதலில் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக, சோடா அல்லது பிற குளிர்பானங்களைத் தேடுகிறோம்.
இது வயிறு எரிச்சல் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும். எனவே அதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சொக்லேட்
பயணத்தின் போது ஏற்படும் சோர்வை போக்க பலர் சொக்லேட் சாப்பிடுகின்றனர். ஆனால் இதுவும் எதிர்பார்த்த பலனைத் தராது.
ஒரு நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்றாலும், ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது உங்களை ஒட்டுமொத்தமாக சோர்வடையச் செய்யும்.
ஆகவே பயணத்தின் போது சொக்லேட் சாப்பிடுவதை தவிர்ப்பதும் நல்லது.