“விமல் - கம்மன்பில இருவரையும் வெளியேற்றிவிட முடியாது”
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இருவரையும் அரசில் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கான சமரசப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மட்டும் கருதி, சில தரப்புகளால் முன்வைக்கப்படும் யோசனைகளை எல்லாம் ஏற்று செயற்படமுடியாது.
சிறிலங்கா சுதந்தரக்கட்சி அரசியல் இருந்து வெளியேறுவதாக இருந்தால் வெளியேறட்டும். அதனை நாம் தடுக்கவில்லை. ஆனால், விமல், கம்மன்பில போன்றவர்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன வழமைபோல தனது வேலையை விமல், கம்மன்பில போன்றவர்களுக்கும் காண்பித்துவிட்டார். மாநாட்டுக்கு வருகை தந்த அவர், பங்காளிக்கட்சிகள் நடத்திய ஊடக சந்திப்புக்கு வரவில்லை. எனவே, நம்ப வைத்து காலைவாரிவிட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.