மக்களுக்கு பேரிடி : அதிகரிக்கப்பட்டுள்ள மின்கட்டணம்
இலங்கையில் இன்று (20) முதல் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இலங்கை மின்சார சபைக்கு குறித்த அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 0 முதல் 30 வரையான அலகுகளுக்கான கட்டணம் 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலையான கட்டணத்தை 150 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக அதிகரித்துள்ளது.
புதிய கட்டணங்கள்
31 முதல் 60 வரையான அலகுகளுக்கான கட்டணம் 25 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம் குறித்த அலகுகளுக்கான நிலையான கட்டணமானது 300 ரூபாயில் இருந்து 360 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
61 முதல் 90 வரையான மின் அலகுகளுக்கான கட்டணம் 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில் அதன் நிலையான கட்டணம் 400 ரூபாயில் இருந்து 480 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 91 முதல் 120 வரையான அலகுகளுக்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து 59 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன் குறித்த அலகுகளுக்கான நிலையான கட்டணம் 1180 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



சந்திரிகாவின் இனப்படுகொலைகளுக்கு அநுரவும் பொறுப்புக்கூற வேண்டும்! 37 நிமிடங்கள் முன்
