லண்டனில் பயங்கரம் தாயும் 05 வயது மகனும் குத்திக்கொலை
வடக்கு லண்டனில் ஒரு பெண்ணும் ஐந்து வயது சிறுவனும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தாயும் மகனும் குத்தி படுகொலை
இவ்வாறு உயிரிழந்தவர்கள் தாயும் மகனும் என கருதப்படுகிறது.
கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தலைமை கண்காணிப்பாளர் சாரா லீச் இது "நம்பமுடியாத சவாலான காட்சி" என்று விவரித்தார்.
புலனாய்வாளர்கள் களத்தில்
மேலும் "என்ன நடந்தது என்பதை ஆராய சிறப்பு புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர் எனவும் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் வேறு எவரும் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்பதை உள்ளூர் பகுதியில் வசிப்பவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று அல்லது சமீப நாட்களில் வழக்கத்திற்கு மாறான எதையும் பார்த்தவர்கள் அல்லது கேள்விப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் காவல்துறையிடம் தகவல் வழங்குமாறு அவர் கூறியுள்ளார். விசாரணைகளின் போது நீங்கள் தகவல் முக்கியமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்

