யாழில் திடீரென மயங்கிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
யாழில் திடீரென மயங்கிய பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியைச் சேர்ந்த தியாகராசா பிரேமநளினி (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்று மாலை 4.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது அவருக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டது. இதனால் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
அங்கு அவர் மயக்கமுற்றார். இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
