தன்னை கடத்தியதாக நாடகமிட்டு கணவனை ஏமாற்றிய மனைவி! அம்பலமான பின்னணி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த பெண்ணை புத்தளம் ஆனமடுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தான் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறி இந்த பெண், கணவன் மற்றும் பிள்ளைகளிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார்.
கடத்திச் செல்லப்பட்டதாக கூறி ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த பெண் வேறு ஒரு வீட்டில் மறைந்து இருந்துள்ளார்.
50 வயதான பெண்

இந்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய கடந்த 15 ஆம் திகதி 50 வயதான பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி