உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி கொழும்பு மற்றும் கண்டியில்
நெதர்லாந்து தூதரகம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இலங்கையில் இணைந்து நடத்தும் உலக ஊடக புகைப்படக் கண்காட்சி(WPPE) தொடர்பில் சிறப்பு அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புகைப்பட செய்தியாளர்கள் கூறும் சக்திவாய்ந்த கதைகளின் தனித்துவத்தாலும், பொதுமக்களின் அதிகமான விருப்பத்தாலும், இந்த உலக ஊடக புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கண்காட்சி, பெப்ரவரி 27, வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பிலுள்ள One Galle Face (OGF) இல் நடைபெறவுள்ளது.
தாக்கமிக்க புகைப்பட செய்தி
மேலும், மார்ச் 13, வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 16, திங்கட்கிழமை வரை கண்டியில் உள்ள Sahas Uyana இல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மற்றும் தாக்கமிக்க புகைப்பட செய்தியியல் மற்றும் ஆவணப்பட புகைப்படங்களின் தொகுப்பை இந்தக் கண்காட்சி வழங்குகிறது.
இது முக்கியமான உலகளாவிய பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும் விவாதிக்கவும் ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.
1955ஆம் ஆண்டு நிறுவப்பட்ட World Press Photo Foundation, ஊடகச் சுதந்திரத்தையும் காட்சிப் படிப்பறிவையும் ஊக்குவிக்கும் வகையில் தாக்கமிக்க கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
2021ஆம் ஆண்டிலிருந்து World Press Photo போட்டி பிராந்திய ரீதியான அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.
இதன் மூலம் பங்கேற்கும் புகைப்படக் கலைஞர்களுக்கு புவியியல் மற்றும் பண்பாட்டு பல்வகைமையை உறுதி செய்கிறது.
தேர்வு செயல்முறை
உலகளாவிய புகைப்பட நடுவர் குழு தலைவரான லூசி கொண்டிசெல்லோ கூறுகையில்,

“உலக நடுவர் தேர்வுகளை , 2025 WPPE பதிப்பை வரையறுக்கும் மூன்று முக்கிய தலைப்புகள் வெளிப்பட்டன.
மோதல்கள், இடம்பெயர்வு மற்றும் காலநிலை மாற்றம்.
இதனை வேறொரு கோணத்தில் பார்க்கும்போது, இவை பொறுமை, குடும்பம் மற்றும் சமூகத்தைப் பற்றிய கதைகளாகவும் காணலாம்.”
31 திறமையான புகைப்பட செய்தியாளர்களைக் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய தரப்புக்கள், 141 நாடுகளைச் சேர்ந்த 3,778 புகைப்படக் கலைஞர்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 60,000 படைப்புகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலித்தன.
பெயரறியப்படாத முறையில்(Open Format பிரிவைத் தவிர) நடைபெற்ற இந்த கடுமையான தேர்வு செயல்முறை, வலுவான மற்றும் தாக்கமிக்க கதைகளைத் தேர்ந்தெடுக்க உறுதி செய்கிறது.
2025 WPPE இல் 42 புகைப்படக் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
அவர்களில், 30 பேர் தங்கள் சொந்த நாடுகளின் கதைகளை புகைப்படம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- உலக ஊடக புகைப்பட இணையத்தளம்: worldpressphoto.org
- இலங்கை பத்திரிகை ஸ்தாபன இணையத்தளம் (SLPI): https://slpi.lk/
- முகநூல்: https://www.facebook.com/WorldPressPhotoSL
- நெதர்லாந்து தூதரக இணையத்தளம்: https://www.netherlandsandyou.nl/web/sri-lanka/home
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |