22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம்!
பழங்களின் சந்தையில் உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஜப்பானின் ஹொக்கைடோ பிராந்தியத்தில் யுபாரி கிங் எனும் அரிய வகை முலாம்பழம் பயிரிடப்படுகின்றது.
முலாம்பழங்களின் அரசன் என இது அழைக்கப்படுகிறது.
சாதாரணப் பழங்களைப் போலன்றி, இந்த அரிய வகை முலாம்பழங்களின் ஒரு ஜோடி இந்திய மதிப்பில் சுமார் 22 லட்சம் ரூபாய் (25,000 அமெரிக்க டாலர்கள்) வரை ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
அபாரமான சுவை
இதன் அபாரமான இனிப்புச் சுவை, தனித்துவமான நறுமணம் மற்றும் சாறு நிறைந்த சதைப்பகுதிக்காக சர்வதேச அளவில் இப்பழம் பெரும் புகழ்பெற்றதாக விளங்குகிறது.
உயர்தரம் மற்றும் மிகக் கடுமையான, பிரத்யேகமான பாரம்பரிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றிப் பயிரிடப்படுவதால் இதன் அரிதான தன்மையும் சந்தை மதிப்பும் பல மடங்கு உயர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண மக்கள் வாங்க முடியாத விண்முட்டும் விலையைக் கொண்ட இந்த முலாம்பழங்கள், ஜப்பானிய கலாச்சாரத்தில் பெரும்பாலும் மிக உயர்தரமான ஆடம்பரப் பரிசாக மட்டுமே வழங்கப்படுகின்றன.
சுவைக்காக மட்டுமின்றி கற்பனை செய்ய முடியாத அதன் வியக்கத்தக்க விலையின் காரணமாக, உலகின் மிக விலையுயர்ந்த மற்றும் விந்தையான பழங்களின் பட்டியலில் இது முதலிடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்