தெஹிவளை மிருககாட்சிசாலையில் காணாமற்போன மஞ்சள் அனகொண்டா பாம்பு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா குட்டி காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெஹிவளை காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை உள்ளூர் பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வந்திருந்தார்.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைப்பு
பின்னர் பாம்புகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத்துறையினரின் காவலில் எடுக்கப்பட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, ஆறு பாம்புகளும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட காலத்திற்குப் பிறகு பொது காட்சிக்கு வைக்கப்படும் என்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் துணை பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர சமீபத்தில் தெரிவித்தார்.
தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மிகவும் கனமான பாம்பு
மஞ்சள் அனகொண்டா தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட மிகவும் கனமான பாம்பு இனம் என்று அவர் கூறினார்.

காணாமல் போன மஞ்சள் அனகொண்டா இதற்கு முன்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |