ஏமனில் பயங்கர வான்வழித் தாக்குதல்: சனா விமான நிலைய ஓடுதளம் தகர்ப்பு
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை இலக்கு வைத்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுப் படைகள் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
சனா விமான நிலையத்தில் ஈரானிய விமானம் ஒன்று தரையிறங்குவதைத் தடுப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனின் தேசிய விமானங்களைச் சனா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்க மறுத்ததாகவும் மாறாக ஏமனின் வான்வெளியை மீறி ஈரானிய விமானம் அங்கு நுழைவதற்கு பிடிவாதமாக வழிவகுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியிட்டுள்ள அறிக்கை
இதன் காரணமாகவே விமான நிலைய ஓடுதளம் தகர்க்கப்பட்டதாக ஏமன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏமனின் தலைநகர் சனா பகுதி ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இற்தறிலையில் சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் ஆதரவு பெற்ற ஏமன் அரசு, தெற்கு கடலோரப் பகுதியான ஏடனை தளமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக ஏமன் பாதுகாப்பு அமைச்சகம் பொதுமக்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான உதவி அமைப்புகளை விமான நிலையப் பகுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்திருந்தது.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்குச் சவூதி அரேபியாவே காரணம் என்று எவ்வித ஆதாரமுமின்றி குற்றம் சாட்டியுள்ள ஹூதி அமைப்பின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை பழிவாங்கப்படாமல் போகாது என்று எச்சரித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |