தண்டவாளத்தில் கழுத்தை வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்!
Sri Lanka Police
Sri Lanka Railways
Death
By pavan
மாத்தறை காளிதாஸ வீதியில் உள்ள தொடருந்து கடவை பகுதியில் தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (07) சனிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது.
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற தொடருந்து இளைஞனின் கழுத்தின் மீது ஏறியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் அடையாளம்

உயிரிழந்த இளைஞனின் உடல் மாத்தறை தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துக்கொண்ட இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் மாத்தறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி