கோர விபத்து..! இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி - பெண் வைத்தியசாலையில்
மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி பயங்கர விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (06.06.2025) குளியாபிட்டி (Kuliyapitiya) - மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பத்துலு ஓய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், குளியாபிட்டியிலிருந்து மாதம்பே நோக்கி பயணித்த வேன், அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளை முந்த முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது.
இதனால், எதிரே வந்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
இருவரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாரதி கைது
பின்னால் அமர்ந்திருந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக வேன் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் குளியாபிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
