யாழில் இடம்பெற்ற கோர விபத்து: சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்
யாழில் (Jaffna) வாகன விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் சாவகச்சேரி - நுணாவில் ஏ-9 வீதியில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
மீசாலை வடக்கு, புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த தி.யதுஸ் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோதி விபத்து
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பரை அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டுள்ளார்.
இதன்போது, எதிர் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக சிகிச்சை
இதனால் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

